30.6.11

தமிழின் இனிமை

கனியிடை ஏறிய சுளையும்- முற்றல்
      கழையிடை ஏறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும்- காய்ச்சுப்
      பாகிடை ஏறிய சுவையும்
நனிபசு பொழியும் பாலும்- தென்னை
      நல்கிய குளிரிள நீரும்
இனியன என்பேன் எனினும்- தமிழை
      என்னுயிர் என்பேன் கண்டீர்!
                                                                                           -பாரதிதாசன்